Pages

Thursday, October 20, 2011

பெரும் பாவங்கள்!



1)
அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்

வணக்கங்களில் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் பெரிய (பாவமாகும்) இணைவைப்பு ஆகும்.

சிறிய இணைவைப்புரியா : -

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “தஜ்ஜாலின் அபாயத்தை விட அதிகமான ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கவில்லையா? ஒரு மனிதன் தொழுகைக்காக நின்று, மக்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய தொழுகையை அழகாக்குகிறார்” (இப்னு மாஜா)

2)
கொலை செய்தல் (25:68)

3)
சூனியம் செய்தல். (2:102)

4)
தொழுகையை விட்டு விடுதல். (19:59)

5)
ஜகாத் கொடுக்காமல் இருத்தல். (3:180)

6)
காரணமில்லாமல் ரமலான் மாதத்தில் நோன்பு வைக்காமல் இருத்தல்.

7)
வசதி இருந்தும் ஹஜ் செய்யாமல் இருத்தல்.

8.)
பெற்றோருக்கு மாறு செய்தல். (17:23)

9)
சொந்த பந்தங்களின் உறவை முறித்தல். (47:22)

10)
விபச்சாரம் செய்தல். (17:30)

11)
ஆண் புணர்ச்சி செய்தல்.

12)
வட்டி வாங்குதல் & கொடுத்தல் (2:275)

13)
அனாதைகளின் சொத்தை அபகரித்தல். 4(10)

14)
அல்லாஹ்வின் மீதும் தூதர் மீதும் இட்டுக்கட்டுதல்.(39:60)

15)
போர்க்களத்தில் இருந்து புறமுதுகு காட்டி ஓடுதல். (8:16)

16)
ஒரு அரசனாக இருந்து கொண்டு தவறு செய்தல், ஏமாற்றுதல், அடக்கு முறைசெய்தல். (அஷ் ஷுஅரா:42)

17)
தற்பெறுமை, ஆணவம் கொள்ளுதல். (அந் நஹ்ல்:23)

18)
பொய் சாட்சி சொல்லுதல் (25:72)

19)
போதை வஸ்துக்களை குடித்தல் (5:90)

20)
சூதாடுதல் (5:90)

21)
குற்றமில்லாத பெண்கள் மீது அவதூறு சொல்லுதல் (24:23)

22)
போரில் கிடைத்த பொருளில் இருந்து மோசடி செய்தல் (3:161)

23)
திருடுதல் (5:38)

24)
கொள்ளை அடித்தல் (5:33)

25)
தவறான சத்தியம் பிரமாணம் செய்தல்.

யாராவது ஒருவர் சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்லும்போது, ஒரு முஸ்லிமின் சொத்தை அபகரிப்பதற்காக தவறான சத்தியம் செய்தல், அவர் மறுமை நாளில் அல்லாஹ்வை சந்திக்கும் போது அல்லாஹ்வி கோபத்துக்கு ஆளாவார் (சஹீஹ் அல் ஜாமிஆ)

26)
அடக்கு முறையை கையாளுதல்.

27)
சட்டவிரோதமாக வரி விதித்தல்

திவாலானவர் யார் என்று தெரியுமா? மறுமை நாளில் தொழுது, நோன்பு நோற்று ஜகாத் கொடுக்கப்பட்ட ஒருவர் கொண்டுவரப்படுவார். ஆனால் அவர் மற்றவர்களை ஏசி, அவதூறு கூறி அவர்களுடைய சொத்துக்களை தவறான வழியில் எடுத்து, அவர்களின் இரத்தத்தை பூமியில் சிந்தியவராவார். அவர்களின் நல்ல அமல்கள் எடுக்கப்பட்டு அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு கொடுக்கப்படும். அது முடிந்து விட்டால் இவர்களுடைய தீமைகள், பாவங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு நரகத்தில் வீசப்படுவார். (சஹிஹ் அல் ஜாமிஆ 87)

28)
தடுக்கப்பட்ட உணவை உட்கொள்ளுதல். (2:188)

29)
தற்கொலை செய்து கொள்ளுதல். (4:29)

30)
தொடர்ந்து பொய் சொல்பவர் (3:61)

31)
இஸ்லாமிய சட்டங்களை விட்டுவிட்டு மற்ற சட்டங்களை வைத்து ஆட்சி செய்பவர் (5:44)

32)
லஞ்சத்தில் ஈடுபடுதல் (2:188)

33)
பெண்கள் ஆண்களைப்போல அல்லது ஆண்கள் பெண்களை போல தோன்றுதல்

ஆண்களைப் போல தோன்றும் பெண்கள் மீதும் பெண்களைப் போல தோன்றும் ஆண்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாகஎன முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சஹீஹ் அல் ஜாமிஆ)

34) ‘
தய்யூத்ஆக இருப்பது

தய்யூத்என்பவர், தன் வீட்டுப் பெண்களை அநாகரிகமான செயல்களைச் செய்வதற்கு அனுமதிப்பவரும், பொறாமைப்படுபவரும், இரண்டு பேர்களுக்கிடையே அருவருக்கத் தக்க செயல்களைச் செய்வதற்கு ஏற்பாடு செய்பவரும் ஆவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்

35)
திருமணம் முடித்து, மனைவியை மற்றவர்களுக்காக கொடுப்பது.

36)
சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாமல் இருப்பது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு கல்லறையின் பக்கம் சென்ற போது சொன்னார்கள், “இவர்கள் இருவரும் மிகப் பெரும் விஷயத்துக்காக தண்டிக்கப் படவில்லை; ஒருவர் சிறுநீர் கழித்து சுத்தம் செய்யவில்லை; மற்றவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தார்” (சஹீஹ் அல் ஜாமிஆ)

37)
மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக செயல்படுவது (107:4-6)

38)
உலக லாபத்துக்காக அறிவைப் பெறுதல் (2:160)

39)
உடன் படிக்கையை முறித்தல் (8:27)

40)
ஒருவர் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது (2:27)

41)
களா கத்ரை மறுப்பது (54:49)

42)
ஒட்டுக் கேட்பது (49:12)

43)
கட்டுக் கதைகளை பரப்புவது (54:10)

44)
மற்றவர்களை ஏசுவது ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும், கொலை செய்வது இறை நிராகரிப்பாகும் (சஹிஹ் அல் ஜாமிஆ)

45)
வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: அவற்றில் ஒன்று வாக்குறுதி கொடுத்தால் அதற்கு மாறுசெய்வான். (புகாரி)

46)
குறி சொல்பவர்களையும், ஜோசியத்தையும் நம்புவது.

யார் ஒருவர் குறி சொல்பவரிடம் சென்று அவர் சொல்வதை நம்புகிறாரோ அவருடைய 40 நாள் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

47)
கணவனுக்கு மாறுசெய்வது (4:34)

48)
துணிகளில், திரைச்சீலைகளில் உருவ படங்களை வரைதல்.

49)
ஒருவரின் இறப்புக்காக அடித்துக் கொள்ளுதல், கதறி அழுதல், துணிகளை கிழித்துக் கொள்ளுதல், முடிகளை இழுத்தல்.

50)
அநீதி இழைத்தல்

51)
மற்றவர்களின் இயலாமையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளுதல்.

52)
அண்டை வீட்டார்களை துன்புறுத்துதல்.

தன்னுடைய துன்புறுத்தலில் இருந்து யார் ஒருவரின் அண்டை வீட்டுக்காரர் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்

53)
முஸ்லீமை ஏசுவது, அவர்களை தொந்தரவு செய்வதும் (33:58)

54)
கனுக்காலுக்கு கிழே ஆடை அணிவது

முஹம்மது நபி (ஸல்) அவர்கள், “யார் கனுக்காலுக்கு கிழே ஆடை அணிகிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் வீசப்படுவார்கள்என்று கூறினார்கள். (புகாரி)

55)
அல்லாஹ்வின் அடிமையை தொந்தரவு செய்வது.

56)
தங்கம், வெள்ளி அணியும் ஆண்கள்

57)
அடிமையை விட்டுவிட்டு ஓடி விடுவது

58)
அல்லாஹ்வுக்கு அல்லாமல் மற்றவர்களுக்காக பலியிடுவது

59)
உண்மைக்கு புறம்பாக, ஒருவரை இன்னாருடைய தந்தை என்று கூறுவது.

60)
மற்றவர்களுக்கு காட்டுவதற்காக விவாதம் செய்வது.



61)
அளவையில் மோசம் செய்தல் (83:1-3)

62)
அல்லாஹ்வின் திட்டத்தில் இருந்து பாதுகாப்பு பெற்றதாக நினைப்பது

63)
பன்றியின் இறைச்சி, இரத்தம் சாப்பிடுவது

64)
காரணமில்லாமல், பள்ளி வாசலை விட்டு விட்டு, தனியாக தொழுவது

65)
ஜும்ஆ தொழுகை, மற்றும் ஜமாஅத் தொழுகைகளை காரணமில்லாமல் தொடர்ச்சியாக தொழாமல் இருப்பது

66)
செல்வாக்கை பயன்படுத்தி மற்றவர்களை தொந்தரவு செய்வது

67)
பித்தலாட்டங்கள், வஞ்சகங்கள் செய்வது

68)
முஸ்லீம்களை வேவு பார்ப்பது

69)
சஹாபாக்களை நித்தனை செய்வது.